2009-08-06 14:47:42

கத்தோலிக்கத் திருச்சபை தகவல் தொழிநுட்பத் துறையில் முழுபலம் கொண்டதாகச் செயல்பட ஆயர் ஹென்றி டி சூசா அழைப்பு


ஆக.06,2009 கணனி தொழிநுட்பத் துறையில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டுவரும் கர்நாடக மாநிலத்தில் கத்தோலிக்கத் திருச்சபை தகவல் தொழிநுட்பத் துறையில் முழுபலம் கொண்டதாகச் செயல்படவில்லையென அம்மாநில ஆயர் ஹென்றி டி சூசா கவலை தெரிவித்தார்.

இளையோர் மற்றும் சமூகத் தொடர்புக்கான கர்நாடக மாநில ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் டி சூசா, ஒரு காலத்தில் மூடும் நிலையிலிருந்த கத்தோலிக்க தகவல் தொடர்பு மையங்கள் தற்போது உயிர்பெற்று எழுந்துள்ள போதிலும் தகவல் தொடர்பு துறையின் முழு சக்தியையும் தலத்திருச்சபை உணர்ந்து செயல்படுத்தவில்லை என்றார்.

இன்றைய இளையோர் திருச்சபையின் மிகப்பெரும் பலமாக இருப்பதால் அவர்களுக்குரிய பயிற்சி வழங்கி திருச்சபையின் திட்டங்களில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆயர் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.