2009-08-05 15:02:20

சிறார்க்கெதிரான செயல்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட ஐ.நா.பாதுகாப்பு அவை அழைப்பு


ஆக.05,2009 போர்க்காலங்களில் சிறார் கொல்லப்படுதல், ஊனமாக்கப்படுதல், கற்பழிக்கப்படுதல், இன்னும் பிற சிறாருக்கு எதிரான பாலியல் பலாத்காரச் செயல்கள் உட்பட அவர்களை படைகளில் சேர்த்தல் ஆகியவற்றை நடத்தும் குழுக்கள் தங்களின் இந்தச் செயல்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஐ.நா.பாதுகாப்பு அவை அழைப்பு விடுத்துள்ளது.

வெட்கத்துக்குரிய பட்டியல் என்ற தலைப்பில் ஐ.நா.பொதுச் செயலரின் ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்கள், சிறார்க்கெதிரான சர்வதேச சட்டத்தை மீறுவதை நிறுத்துவதற்கானத் திட்டங்களை வெளியிடுமாறும் ஐ.நா.பாதுகாப்பு அவை வலியுறுத்தியுள்ளது.

சிறாருக்கெதிரான செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுக்களுக்குத் தண்டனை அளிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்பு அவை 2005ம் ஆண்டிலே நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

 








All the contents on this site are copyrighted ©.