2009-08-05 14:58:09

கர்நாடக மாநிலத்தில் அருள்தந்தை ஜேம்ஸ் முலக்கெல் கொல்லப்பட்டது குறித்து ஆயர்கள் கண்டனம்


ஆக.05,2009 இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கத்தோலிக்க அருள்தந்தை ஜேம்ஸ் முலக்கெல் கொடூரமாய்க் கொல்லப்பட்டது குறித்து அம்மாநில ஆயர்கள் தங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.

சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்குத் தொண்டாற்றிய மற்றும் அர்ப்பண உணர்வோடு தன்னை அர்ப்பணித்த கடவுளின் மனிதர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்றுரைத்த ஆயர்கள் அக்குருவின் துயரால் வருந்தும் சகோதர குருக்கள் மற்றும் குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை தொடர்பாகத் தாங்கள் யாரையும் சந்தேகப்படவோ அல்லது யாரையும் குற்றம் சாட்டவோ விரும்பவில்லை, எனினும் அரசு இதில் ஒருதலைசார்பற்ற விசாரணையை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளனர் கர்நாடக ஆயர்கள்.

மங்களூருக்கு அருகிலுள்ள பெல்த்தன்காடி சீரோ மலபார்ரீதி மறைமாவட்டத்தின் 39 வயதாகும் அருள்திரு ஜேம்ஸ் முலக்கெல், கடந்த ஜூலை 30ம் தேதி கொல்லப்பட்டார்.

 








All the contents on this site are copyrighted ©.