2009-08-05 14:59:22

ஐரோப்பிய சமுதாய அவை பரிந்துரைத்துள்ள சமத்துவ விதிமுறைகள், கிறிஸ்தவர்கள் தங்கள் மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட அவர்களைத் தூண்டக் கூடும், பிரிட்டன் கத்தோலிக்க ஆயர்கள்


ஆக.05,2009. ஐரோப்பிய சமுதாய அவை பரிந்துரைத்துள்ள சமத்துவ விதிமுறைகள், கிறிஸ்தவர்கள் தங்கள் மனசாட்சிக்கு எதிராகச் செயல்பட அவர்களைத் தூண்டக் கூடும் என்று பிரிட்டன் கத்தோலிக்க ஆயர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஐரோப்பிய சமுதாய அவையின் 27 நாடுகளில் பாலியல் ரீதியாகவும், வயது, மத நம்பிக்கை, ஊனம் ஆகியவற்றின் அடிப்படையிலும் பாகுபடுத்தப்படுவதைத் தடை செய்வதற்கென அமைக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து பொது மக்களின் கருத்துப் பரிமாற்றத்திற்கென அறிக்கை வெளியிட்டுள்ள இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாண்ட் ஆயர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

இது குறித்து பிரிட்டன் அரசின் சமத்துவ அலுவலகத்துக்கும் தங்கள் அறிக்கையை சம்ப்பித்துள்ள ஆயர்கள், இவ்விதிமுறைகள் சமய சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

திருச்சபை தனது ஒழுக்கநெறிகளுக்கு ஒத்திணங்கும் வகையில் தனது போதனைகளையும் நடவடிக்கைகளையும் காப்பதற்கான உரிமையைக் கொண்டிருப்பதற்கு தற்போது ஐரோப்பிய சமுதாய அவை பரிந்துரைத்துள்ள சமத்துவ விதிமுறைகள் உதவவேண்டுமென ஆயர்கள் கேட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.