ஆக.04,2009 பாகிஸ்தானின் இஸ்லாமபாத் ராவல்பிண்டியின் வாரிசுரிமை ஆயராக அருள்திரு ரூபின்
அந்தோணியை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
1940ம் ஆண்டு பாய்சலாபாத்
மறைமாவட்டத்தில் பிறந்த அருள்திரு ரூபின் அந்தோணி, தற்போது கராச்சியின் கிறிஸ்து அரசர்
குருத்துவமடத்தின் அதிபராகவும் பாய்சலாபாத் மறைமாவட்டத்தின் குருகுல அதிபராகவும் பணியாற்றி
வருகிறார்.
பாகிஸ்தானின் இஸ்லாமபாத் ராவல்பிண்டியின் வாரிசுரிமை ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள
அருள்திரு ரூபின் அந்தோணி உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைகழகத்தில் உயர் கல்வி பயின்றவர்.