பாகிஸ்தானில் தேவநிந்தனை என்று குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவ கிராமம் ஒன்று தீ வைக்கப்பட்டுள்ளது
ஆக.,01,2009. பாகிஸ்தானில் தேவநிந்தனை என்று குற்றம் சாட்டப்பட்டு கிறிஸ்தவ கிராமம் ஒன்று
முஸ்லீம்களால் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்
என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.
பஞ்சாப் மாகாணத்திலுள்ள கொரியன் என்ற கிறிஸ்தவ
கிராமம் இவ்வியாழன் இரவு ஆயிரக்கணக்கான முஸ்லீம்களால் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு
வாழ்ந்த ஏறத்தாழ நூறு கிறிஸ்தவக் குடும்பங்களும் வெளியேறி விட்டன என்றும் அச்செய்தி நிறுவனம்
கூறியது.
ஒரு கிறிஸதவ வீட்டின் முன்பாக இசுலாமிய எழுத்துக்களைக் கொண்ட சில தாள்கள்
கிடந்ததே இவ்வன்முறைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
அக்கிராமத்திலுள்ள 60 வீடுகளும்
2 ஆலயங்களும் பாகிஸ்தான் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவையாகும்