2009-07-30 20:08:27

நேபாளத்தில் இயேசுசபையைச் சேர்ந்த அருள் தந்தை தாக்கப்பட்டார். 3007.


நேபாளத்தில் இயேசு சபையைச் சேர்ந்த அருள் தந்தை தாக்கப்பட்டு காயமடைந்திருக்கிறார் .

தலைநகர் காட்மாண்டுவில் 34 ஏழை மாணவர்களது விடுதியின் கண்காணி்ப்பாளராக இருப்பவர் தந்தை எக்கா டேவிட் . இம்மாதம் 27 ஆம் தேதி கத்திகளோடு வந்த இளைஞர்கள் தந்தை எக்காவை தலையிலும் உடலிலும் காயப்படுத்தினர் . தந்தையின் கூக்குரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து காப்பாற்றியிருக்கிறார்கள் . இதுபற்றிக் கூறிய நேபாளத்தின் இயேசு சபைத் தலைவர் லாரன்ஸ் மணியார் தலையிலும் கையிலும் முதுகிலும் தந்தை எக்காவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை எனவும் தெரிவித்துள்ளார் . சில நாட்களுக்கு முன்னர் ஒழுங்கீனம் காரணமாக நீக்கப்பட்ட 13 வயதுடைய மாணவரின் பழிவாங்கும் முயற்சியாக இது இருக்கலாம் எனக் காவலர்கள் சந்தேகித்து விசாரணை செய்து வருகின்றனர் .








All the contents on this site are copyrighted ©.