இவர் இயேசுவின் சீடருள் ஒருவர் . இவரது சகோதரி மேரி, இவரது சகோதரர் இறந்த பிறகு இயேசுவால்
உயிரோடு எழுப்பப்பட்ட லாசர் . மூன்று முறை நற்செய்தியில் அவரைப் பற்றிய செய்தியை நாம்
காண்கிறோம். இயேசுவை தம் வீட்டில் வரவேற்று அன்போடு உபசரிப்பதைப் பார்க்கிறோம் . லாசர்
உயிரோடு எழுப்பப்பட்ட பொழுது இயேசுவை இறைமகன் என அவரைப்பற்றிய தம் விசவாசத்தை அறிவிக்கிறார்.
இயேசு பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு 6 நாட்களுக்கு முன்னர் மார்த்தாள் அவருக்குத் தம்
வீட்டில் விருந்து பரிமாறினார்.