இந்திரோத் நகரின் கெளரவ உறுப்பினராக
திருத்தந்தை சிறப்புப்பட்டம் வழங்கப்படுவார் .
இத்தாலியின் ஆல்ப் மலையில் உள்ள
வாலே ஆவோஸ்டா விடுமுறையில் இல்லத்திலிருந்து திருத்தந்தை இப்புதன் ஜூலை 29 மாலை கிளம்பி
காஸ்டல் காண்டால்போ இல்லம் வருகிறார் . வாலே ஆவோஸ்டாவில் உள்ள இந்த்ரோ நகரின் லாஸ் கோம்பசிலிருந்து
கிளம்புவதற்கு முன்னர் சலேசியச் சபையைச் சேர்ந்த இளம் துறவியரைச் சந்திக்கிறார் திருத்தந்தை
. இத்தாலியின் வடபகுதியில் உள்ள சலேசிய துறவுமடத்தில் இம்மாதம் 13 தேதியிலிருந்து தம்
விடுமுறையைக் கழித்த திருத்தந்தை தாம் அமைதியாக ஓய்வெடுக்க உதவிய இந்த்ரோத் நகர மக்களுக்கு
நன்றி கூறிவிட்டு கிளம்புகிறார் . இந்த்ரோத் நகரசபை திருத்தந்தைக்கு அந்நகரின் கெளரவ
உறுப்பினர் என்ற சிறப்புப்பட்டம் அளிக்க விரும்புகிறது . திருத்தந்தையின் ஒப்புதலுக்கு
ஏற்ப திருத்தந்தை உரோமையிலிருக்கும்போது இந்த்ரோத் நகர் உறுப்பினர்கள் உரோமை வந்து சிறப்புப்பட்டத்தை
வழங்க இருப்பதாக திருத்தந்தையின் செய்தித் தொடர்பாளர் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி தெரிவித்துள்ளார்
.