2009-07-29 18:57:46

காஸ்டல் காண்டோல்போ திரும்புகிறார் திருத்தந்தை. 290709.


காஸ்டல் காண்டோல்போ திரும்புகிறார் திருத்தந்தை.

இந்திரோத் நகரின் கெளரவ உறுப்பினராக திருத்தந்தை சிறப்புப்பட்டம் வழங்கப்படுவார் .

இத்தாலியின் ஆல்ப் மலையில் உள்ள வாலே ஆவோஸ்டா விடுமுறையில் இல்லத்திலிருந்து திருத்தந்தை இப்புதன் ஜூலை 29 மாலை கிளம்பி காஸ்டல் காண்டால்போ இல்லம் வருகிறார் . வாலே ஆவோஸ்டாவில் உள்ள இந்த்ரோ நகரின் லாஸ் கோம்பசிலிருந்து கிளம்புவதற்கு முன்னர் சலேசியச் சபையைச் சேர்ந்த இளம் துறவியரைச் சந்திக்கிறார் திருத்தந்தை . இத்தாலியின் வடபகுதியில் உள்ள சலேசிய துறவுமடத்தில் இம்மாதம் 13 தேதியிலிருந்து தம் விடுமுறையைக் கழித்த திருத்தந்தை தாம் அமைதியாக ஓய்வெடுக்க உதவிய இந்த்ரோத் நகர மக்களுக்கு நன்றி கூறிவிட்டு கிளம்புகிறார் . இந்த்ரோத் நகரசபை திருத்தந்தைக்கு அந்நகரின் கெளரவ உறுப்பினர் என்ற சிறப்புப்பட்டம் அளிக்க விரும்புகிறது . திருத்தந்தையின் ஒப்புதலுக்கு ஏற்ப திருத்தந்தை உரோமையிலிருக்கும்போது இந்த்ரோத் நகர் உறுப்பினர்கள் உரோமை வந்து சிறப்புப்பட்டத்தை வழங்க இருப்பதாக திருத்தந்தையின் செய்தித் தொடர்பாளர் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.