2009-07-29 19:02:38

ஒரிசா வன்முறையில் கைதான ஐவருக்கு கடுங்காவல் தண்டனை. 290709.


ஒரிசா வன்முறையில் கைதான ஐவருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உயர் நீதி மன்றம் தீர்ப்புக்கூறியுள்ளது .இதனை வரவேற்றுள்ளார் ஒரிசாவின் புவனேசுவரப் பேராயர் ரபேல் சீனத் . இதனைப் பேராயர் 28 ஆம் தேதி தெரிவித்தார் . கடுங்காவல் தண்டனைத்தீர்ப்பு ஜூலை 27 ல் வழங்கப்பட்டது . கடுங்காவல் சிறைத்தண்டனையோடு தலா 5000 ரூபாய் அபராதத் தொகையும் செலுத்துமாறு நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது . வன்முறை தலைவிரித்தாடிய பகுதியில் கிறிஸ்தவர்கள் இன்னும் அச்சத்தோடு வாழ்வதாகத் தெரிகிறது . வன்முறையில் சம்பந்தப்பட்ட கயவர்கள் இன்னமும் அப்பகுதியில் அச்சமூட்டி வருவதாக மேலும் பேராயர் தெரிவித்துள்ளார் . உயர் நீதிமன்றத் தீர்ப்பு கிறிஸ்தவர்களுக்கு உற்சாகமூட்டி விரைவில் அவர்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்ப ஊக்கமளிக்கும் எனவும் பேராயர் ரபேல் சீனத் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.