அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின மையக்கருத்து. 290709 .
அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தை வழங்கியுள்ளார்
.
அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்
. 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும் . இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும்
உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்துகிறார் . சுற்றுப்புறத்தைப்
பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும்
தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார் . இந்த சவால்களை நீதியின்
அடிப்படையில் , சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை
தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார்.
அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார்.