பிலிப்பைன்ஸ் நாட்டின் முந்நாள் தலைவருக்கு திருத்தந்தையின் கடிதம்.240709.
பிலிப்பைன்ஸ் நாட்டின் முந்நாள் தலைவருக்கு திருத்தந்தையின் ஆறுதல் கடிதம்.
பிலிப்பைன்ஸ்
நாட்டின் முந்நாள் தலைவர் திருமதி கொராசன் அக்வீனோ பெருங்குடல் புற்று நோயால் அவதியுறுகிறார்
. அவர் தற்போது மணிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . பிலிப்பைன்ஸ் நாட்டின்
வத்திக்கான் தூதரகம் வழியாக திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் நலம் விசாரித்து அவரது இறை
மன்றாட்டுக்களைக் காணிக்கையாக்கி விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார் . திருத்தந்தையின்
செபங்கள் தமக்கு ஆறுதலாக இருப்பதாக திருமதி அக்வீனோ தெரிவித்துள்ளார் . 76 வயதாகும்
திருமதி அக்வீனோ 1986 ஆம் ஆண்டிலிருந்து 92 வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தார்.