வலது மணிக்கட்டில் முறிவு காரணமாகக் கட்டுப்போட்டிருக்கும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்
ஒலிப்பதிவு எந்திரம் கொண்டு அவரது எழுத்துப் பணியைத் தொடர்கிறார் . திருத்தந்தை வட இத்தாலியின்
லெஸ் கோம்பஸில் விடுமுறையைக் கழித்துவருகிறார் . கையில் நோயுற்றுள்ள தற்போது இயேசுக்
கிறிஸ்துவின் வரலாற்று நூலின் 2 ஆம் பகுதியை எழுதிக் கொண்டிருக்கிறார் . அதனை அவர் ஒலிப்பதிவு
எந்திரத்தின் உதவியோடு செய்து வருவதாகக் கூறுகிறார் திருத்தந்தையின் செய்தித் தொடர்பாளர்
தந்தை லொம்பார்டி . வலது கையில் உள்ள கட்டோடு பணியைத் தொடர அவர் கற்றுவருவதாகவும் தந்தை
லொம்பார்டி தெரிவித்தார் . திருத்தந்தை அவருடைய மூத்த சகோதரர் மேதகு ஜார்ஜ் ராட்சிங்கரோடு
அவ்வப்போது தொலைபேசி வழியாகப் பேசி வருவதாகவும் தந்தை லொம்பார்டி தெரிவித்தார் . 85 வயதாகும்
மேதகு ஜார்ஜ் திருத்தந்தையோடு 4 வாரங்கள் திருத்தந்தையின் கோடை விடுமுறை இல்லமாகிய காஸ்டல்
கண்டோல்போவில் செலவிடுவார் எனத் தெரிகிறது . இம்மாதம் 29 ஆம் தேதி திருத்தந்தை அங்கு
செல்லவிருக்கிறார் . இம்மாதம் 24 ஆம் தேதி அவர் தங்கியிருக்கும் லெஸ்கோம்பசுக்கு அருகில்
உள்ள ஆவோஸ்டா பேராலயத்தில் மாலை வழிபாட்டில் திருத்தந்தை கலந்து கொள்வார் .