2009-07-23 20:39:28

உலகின் முதுபெரும் இயேசு சபைத்தந்தை காலமானார் .230709


உலகின் முதுபெரும் இயேசு சபைத்தந்தை காலமானார் . உலகில் 20,000 இயேசு சபைத் துறவியர் உள்ளனர் . இந்தியாவில் 4000 இயேசு சபையினர் உள்ளனர். அமெரிக்காவின் மிசூரியில் உள்ள தூய லூயிஸ் பல்கலைக் கழகத்தில் இருந்த தந்தை ரேமண்ட் ரெய்ஸ் இம்மாதம் 19 ஆம் தேதி அவரது 104 வயதில் காலமானார் . உலகத்தில் உள்ள இயேசு சபையினரில் இவரே மிக அதிக வயதுடையவராக இருந்தார் . தூய லூயிசில் மார்ச்சு 25 ல் பிறந்த அவர் முனைவர் பட்டம் பெற்று 1961 ஆம் ஆண்டிலிருந்து 1973 வரை பேராசிரியராக இருந்து வந்தார் . அதன் பிறகு மருத்துவத்துறையில் செவிலியர் பட்டம் பெற்று 1992 வரை லூயிஸ் பல்கலையில் தங்கியுள்ளோருக்கு தொண்டு புரிந்து வந்தார். தந்தை ரேமண்டின் நல்லடக்கச் சடங்குகள் இம்மாதம் 23 ஆம் தேதி வியாழக்கிழமை நடக்கிறது .








All the contents on this site are copyrighted ©.