புனிதை பிரிஜித்தம்மாள் விழா. 1303ம் ஆண்டு சுவீடனில் பிறந்த புனிதை பிரிஜித்தா, தனது
14ம் வயதிலேயே மாக்னஸ் என்ற சுவீடன் நாட்டு மன்னரை மணமுடித்து எட்டுக் குழந்தைகளுக்குத்
தாயானாள். இவரின் மகள் கத்ரீனும் ஒரு புனிதையே. தன் கணவர் இறந்த பின் புனிதை பிரிஜித்தா
தன் அநைத்துச் சொத்துக்களையும் கொண்டு ஒரு துறவு மடத்தைத் துவக்கினார். இன்றும் இந்த
பிரிஜிட்டைன் சபை உலகம் முழுவதும் பல்வேறு தொண்டுகளைப் புரிந்து வருகிறது. புனித பிரிஜித்தம்மாள்
1373ம் ஆண்டில் உரோம் நகரில் ஜூலை23 ல் இறந்தார்.
ஜூலை23, 1649 திருத்தந்தை 11ம்
கிளமென்ட் பிறந்தார்.
1856 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் லோக்மான்ய திலக் பிறந்தார்.