2009-07-22 13:57:13

முதிராத கருத்திசுக்கள் குறித்த ஆராய்ச்சிக்கு உருகுவாய் ஆயர்கள் எதிர்ப்பு


ஜூலை22,2009 உருகுவாய் நாட்டு நாடாளுமன்றம் முதிராத கருத்திசுக்கள் குறித்த ஆராய்ச்சிக்குப் பச்சைக் கொடி காட்டுவதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளை, முதிராத திசு, உரிமைகளைக் கொண்டுள்ள ஒரு மனித உயிர் என்று சொல்லி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

கடந்த ஆண்டில் பரிந்துரை செய்யப்பட்ட முதிராத கருத்திசுக்கள் ஆராய்ச்சிக்கான அனுமதி குறித்த மசோதாவுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் அனுமதியளிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மொந்தேவீதெயோ உயர்மறைமாவட்டத்தின் உயிரியல் நன்னெறிகளுக்கான மேய்ப்புப்பணி நிறுவனம்

அந்நிறுவனம் இத்திங்களன்று வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், திசுக்கள் ஆராய்ச்சிக்குத் திருச்சபை தனது முழு ஆதரவை வழங்குகின்றது, எனினும் மனித உயிர் அழிக்கப்படும் ஆராய்ச்சிக்கு அது எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்று கூறியுள்ளது







All the contents on this site are copyrighted ©.