2009-07-20 15:51:21

வரலாற்றில் ஜூலை 21


புனித பிரிந்திசி இலாரன்ஸ் விழா. இத்தாலியராகிய இவர் கப்புச்சின் துறவி மற்றும் திருச்சபையின் மறைவல்லுனரும் ஆவார். துருக்கியர்கள் எண்பதாயிரம் படைவீரரோடு கிறிஸ்தவ நாடுகளின் மீது படையெடுத்து வந்த போது பதினெட்டாயிரம் கிறிஸ்தவ போர்வீரர்களே இருந்தாலும் புனித பிரிந்திசி இலாரன்ஸ் திருச்சிலுவையைக் கையிலேந்தித் தாங்கிச் சென்று கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தவர். அரசர்களிடையே அமைதியை நிலைநாட்டியவர் என்ற பெருமை இப்புனிதருக்கு உண்டு.

கி.மு.356 – உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருந்த எபேசு நகர் ஆர்த்தெமிஸ் ஆலயத்திற்கு ஹெரோஸ்ட்ராட்டுஸ் என்பவர் தீ வைத்தான்.

1515 – புனித பிலிப்நேரி பிறந்தார்

1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெயோபால்ட் முடிசூடிய நாள்

1964– சிங்கப்பூரில் இனவெறி கலகம் வெடித்தது. அன்றிலிருந்து அந்நாள் ஆண்டுதோறும் தேசிய நல்லிணக்க தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது

2001 - தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் இறந்தார்








All the contents on this site are copyrighted ©.