மெக்சிகோவில் போதைப் பொருள் தொடர்புடைய வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட மூன்று
நாள் சிறப்புச் செபங்கள்
ஜூலை18,2009. மெக்சிகோ நாட்டின் மிக்கோகான் மாநிலத்தில் போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்புடைய
பழிவாங்கும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட மூன்று நாள் செபங்களை அறிவித்துள்ளனர்
அம்மாநில ஆயர்கள்.
மெக்சிகோவின் இந்த மேற்கு மாநிலத்தில் போதைப் பொருள் தொடர்புடைய
பழிவாங்கும் வன்முறைகள் அதிகரித்து வருவதால் பதட்டநிலை சூழல் காணப்படுவதாகக் கூறியுள்ள
ஆயர்கள், இம்மாதம் 23 முதல் 25 வரையுள்ள நாட்களில் திருநற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை,
செபமாலை ஆகியவை உள்ளிட்ட செபங்கள் செய்து சுமுகமான சூழ்நிலை உருவாகச் செபிக்குமாறு விசுவாசிகளைக்
கேட்டுள்ளனர்.
போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் அவற்றைத் தயாரிப்போரில் பத்து
நகர மேயர்களுக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மெக்சிகோவில்
போதைப் பொருள் தடுப்புக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் இதுவரை 12 ஆயிரத்துக்கு
மேற்பட்டோர் இறந்துள்ளனர்.