சுற்றுச்சூழல் மாசுகேடு குறித்த சர்வதேச ஒப்பந்தம் அக்டோபரில் அமலுக்கு வருகிறது
ஜூலை18,2009. சுற்றுச்சூழல் மாசுகேடடைந்த பகுதிகளை அரசுகள் பொதுப்படையாக அடையாளம் காட்ட
வேண்டும் என்பது குறித்த ஒரு சர்வதேச ஒப்பந்தம் வருகிற அக்டோபர் எட்டாம் தேதியிலிருந்து
அமலுக்கு வரும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்தது.
இந்த ஒப்பந்தம்
எல்லா நாடுகளுக்குமானது எனினும் இதில் இதுவரை கையெழுத்திட்டுள்ள 36 நாடுகள் அனைத்தும்
ஐரோப்பிய நாடுகள் என்று ஐ.நா.வின் ஐரோப்பாவுக்கான பொருளாதார அவை அதிகாரி Michael Stanley-Jones
கூறினார்.
இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில், பேராபத்தை வருவிக்கும் 86 மூலக்கூறுகள்
பற்றிப் பேசப்பட்டதாக அவர் கூறினார்.