மலேசியாவில் மதம் மாறத் தூண்டியதாக கிறிஸ்தவர்கள் கைது .160709.
இஸ்லாமியரை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய முயன்றதாக கிறிஸ்தவ இளைஞர்கள் மீது குற்றம்
சுமத்தியுள்ளது மலேசிய அரசு . பல்கலைக் கழக வளாகத்தில் மற்ற இளைஞர்களை மதமாற்றம் செய்ய
முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை கிறிஸ்தவ இளைஞர்கள் மறுத்துள்ளார்கள் . கோலாலம்பூருக்குத்
தெற்கேயுள்ள புத்ரா பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்ததாக 5 இஸ்லாமிய
இளைஞர்கள் காவலர்களிடம் புகார் மனு கொடுத்ததன் பேரில் 9 கிறிஸ்தவ இளைஞர்கள் மீது காவலர்
வழக்குத் தொடுத்துள்ளனர் . இந்தக் கிறிஸ்தவ இளைஞர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள தங்கள்
நண்பர்களைச் சந்திக்கச் சென்றதாகவும் அவர்களில் இரு மாணவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கு
பயிலாதவர்கள் எனவும் தெரிகிறது . மலேசியாவில் இஸ்லாமியர் மதம் மாறுவது குற்றமாகக் கருதப்படுகிறது
.