2009-07-16 19:37:56

கர்தினால் நியூமனுக்கு மே 2 ல் முத்திபெற்றவர் பட்டம் .160709 .


இங்கிலாந்தின் கர்தினால் ஜான் என்றி நியூமன் மேத்திங்கள் 2 ஆம் நாள் முத்திப்பேறு பட்டம் வழங்கப்படுவார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இம்மாதம் 3 ஆம் தேதி கர்தினால் நியூமனுக்கு முத்துப்பேறு பட்டம் அளிக்கும் அனுமதி அளித்தார் . அதற்கு முன்னர் முத்துப்பேறு பட்டம் அளிப்பதை ஆராயும் வத்திக்கான் திருப்பீட மன்றம் சரியாக ஆராய்ந்து தெளிந்தது . 2001 ஆம் ஆண்டு முதுகுத் தண்டுவட நோயால் துயருற்ற மார்ஷ்பீல்டைச் சேர்ந்த தியாக்கோன் ஜான் சலைவன் முழுக்குணம் பெற்ற நிகழ்ச்சி அற்புதமானது எனவும் மருத்துவத்துக்கு புலப்படாத புதுமை வரத்தால் அவர் நலம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. கர்தினால் நியூமனுக்கு பர்மிங்காமில் உள்ள ஆரட்டரியில் புனித அத்தனேசியஸ் திருவிழாவன்று முத்துப்பேறு பட்டம் வழங்கப்படும் என வத்திக்கானின் புனிதர் பட்டம் வழங்கும் மன்றம் தெரிவித்துள்ளதாக கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றை மேற்கோள்காட்டி சிஎன்எஸ் என்ற செய்தி நிறுவனம் ஜூலை 15 ல் செய்தி வெளியிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.