பிரிட்டனில் பொருளாதார நெருக்கடியால் மூன்றில் இரண்டு பேர் பாதிப்பு
ஜூலை15,2009 தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பிரிட்டனில் மூன்றில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்று பிபிசி எடுத்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் பத்துக்கு நான்கு பேர் வேலை
இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் வாழ்வதாகக் கூறும் அவ்வாய்வு, வேலைகளை இழந்தால் தாங்களும்
தங்களது குடும்பமும் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை 69 விழுக்காட்டினர் வெளியிட்டதாகவும்
அறிவித்தது.
ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் எடுத்த ஆய்வின்படி, தற்போதைய பொருளாதார
நெருக்கடி மேலும் மோசமடையும் என்று 34 விழுக்காட்டினரும், இப்போதைக்குப் பொருளாதாரம்
மேம்படாது என்று 52 விழுக்காட்டினரும் கருதுகின்றனர்.