2009-07-14 14:54:51

மடுமாதா திருவிழாக் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள அரசு அனுமதி


ஜூலை14,2009 இலங்கையின் மடுமாதா திருத்தலத்தில் வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை சிறப்பிக்கப்படும் மாதா திருவிழாக் கொண்டாட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை அரசுத்தலைவரின் சிறப்புச் செயலர் பேசில் இராஷபக்ஷாவுடன் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு, மடுமாதா திருத்தலத்தின் முன்னாள் நிர்வாகி அருள்திரு எமிலியானஸ்பிள்ளை, இலங்கை காரித்தாஸ் இயக்குனர் அருள்திரு டேமியன் பெர்னாண்டோ, சலேசிய சபையின் மாநில இயக்குனர் அருள்திரு அன்டனி பின்டோ உடபட பல தலத்திருச்சபை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இம்முடிவு அறிவிக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள விசுவாசிகள் அனுமதிக்கப்பட்டாலும் 6 முதல் 11 வரை பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் மடுமாதா திருத்தலப் பகுதியில் இரவில் தங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.