ஜூலை13,2009 இத்தாலியின் வாலேதிவோஸ்தா மலைப்பகுதியிலுள்ள லெ கோம்ப்ஸ் என்ற ஊருக்கு இரண்டு
வரா கோடை விடுமுறைக்கென இத்திங்களன்று தான் செல்வது பற்றியும் ஞாயிறு மூவேளை செப உரையின்
இறுதியில் கூறினார் திருத்தந்தை.
இந்தத் தனது விடுமுறை காலத்தில் தனக்காகச் செபிக்குமாறும்
விசுவாசிகளைக் கேட்டுக் கொண்ட அவர், தூரங்களும் பிரிவுகளும் செபத்திற்குத் தெரியாது,
நாம் எங்கிருந்தாலும் செபம் நம்மை ஒரே இதயம் ஒரே மனம் கொண்டவர்களாக ஆக்குகின்றது என்றார்.
வாகனம்
ஓட்டுபவர்கள் விவேகமாகவும் அதேவேளை, நெடுஞ்சாலை விதிகளை மதிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும்
கடமையையும் விடுமுறைக்குச் செல்லும் இந்நேரத்தில், வலியுறுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்
திருத்தந்தை.
இன்னும், இந்நாட்களில் கொண்டூராஸ் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள்
கவலையைத் தருகின்றன என்றுரைத்த திருத்தந்தை, அந்நாட்டின் தலைவர்களும் குடிமக்களும் புரிந்து
கொள்ளுதல், ஒப்புரவு மற்றும் உரையாடலின் பாதையைக் கடைபிடிக்குமாறு அழைப்புவிடுகத்தார்.
இம்மாதம் 13 முதல் 29 வரை லெ கோம்ப்ஸில் இருக்கும் திருத்தந்தை, அதன் பின்னர்
பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகை அமைந்திருக்கும் காஸ்தெல் கண்டோல்ப்போ சென்று செப்டம்பர்
வரை அங்கிருப்பார்.