வழிபாட்டு ஆண்டின் 15 ஆவது ஞாயிறு நற்செய்தி . 110709 .
மாற்கு நற்செய்தி அதிகாரம்
6 , 7- 12 .
மாற்கு நற்செய்தி அதிகாரம் 6 , 7- 12 .
7 அப்பொழுது அவர்
பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத்
தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி
தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்
கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும்
அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர்,
' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே
தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி
சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை
உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13
பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.