2009-07-10 15:15:52

ஐ.நாபொதுச் செயலரின் உலக மக்கள் தொகை தினத்திற்கான செய்தி


ஜூலை10,2009 பெண்களின், குறிப்பாக கர்ப்பிணி பெண்களின் நலவாழ்வில் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலம், ஆண்டு தோறும் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட தாய்மாரின் உயிர்களைக் காப்பாற்றுவதோடு, ஆண்டிற்கு 1500 கோடி டாலர் அளவிலான உற்பத்தியை பெற முடியும் ஐ.நாபொதுச் செயலரின் உலக மக்கள் தொகை தினத்திற்கான செய்தி கூறுகிறது.

ஏழ்மைக்கெதிரான போராட்டம் சிறுமிகளுக்கு கல்வி கற்பித்தல் என்ற தலைப்பில் ஜூலை 11, இச்சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் இவ்வுலக தினத்திற்கான அவரின் செய்தி, தற்போதைய நெருக்கடி, கஷ்டப்பட்டு குறைக்கப்பட்ட வறுமை மற்றும் நலவாழ்வில் காணப்பட்ட முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று உரைக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.