இத்தாலிய ஆயர்களும் கத்தோலிக்கக் கழகங்களும் ஜி8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு
இத்தாலிய அரசு பிரதிநிதிகளைச் சந்தித்தனர்
ஜூலை04,2009 பணக்கார நாடுகளின் தலைவர்களை வறுமை, வெப்பநிலை மாற்றம், குடியேற்றம், வளங்கள்
பாதிக்கப்படுதல் ஆகியவைகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றி விவாதிக்குமாறு இத்தாலிய ஆயர்களும்
கத்தோலிக்கக் கழகங்களும் அழைப்பு விடுத்துள்ளன.
இத்தாலியின் லாக்குய்லாவில் இம்மாதம்
எட்டாம் தேதி தொடங்கவுள்ள ஜி8 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு இத்தாலிய அரசு
பிரதிநிதிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை இத்தாலிய கத்தோலிக்கத் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஜி8
நாடுகளின் அரசுகளின் பொறுப்புக்களைச் சுட்டிக்காட்டும் இரண்டு பக்க அறிக்கையை சமர்ப்பித்த
இத்தலைவர்கள் உலக அளவில்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் தற்போதைய வளர்ச்சியின்
வடிவத்தில் மாற்றத்தைக் கொணருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இத்தாலி, பிரான்ஸ்,
ஜெர்மனி, கானடா, பிரிட்டன், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், இரஷ்யா ஆகிய ஜி8 நாடுகளின்
தலைவர்கள் ஜூலை 8முதல் 10 வரை மாநாடு நடத்தவுள்ளனர்.