கலிலேயோவுக்கு எதிராக திருச்சபையில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகள் தொடர்புடைய ஆவணங்கள்
வெளியிடப்பட்டுள்ளன
ஜூலை02,2009. இத்தாலிய வானியல் வல்லுனர் கலிலேயோ கலிலெய்க்கு எதிராக திருச்சபையில் நடத்தப்பட்ட
வழக்கு விசாரணைகள் தொடர்புடைய ஆவணங்கள் இன்று நிருபர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
நிருபர்கள்
சந்திப்பில் இதனை வெளியிட்ட வத்திக்கான் இரகசிய ஆவண காப்பகத்தின் தலைவர் ஆயர் செர்ஜோ
பகானோ, இவ்விசாரணைகள் தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் சுருக்கமும் அது குறித்த விளக்கங்களும்
அதற்குப் பின் எழுந்த விவாதங்களும் என அனைத்தும் புதிய புத்தகத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக்
கூறினார்.
வத்திக்கானின் இரகசிய காப்பகத்தில் இதுநாள்வரை போற்றி பாதுகாக்கப்பட்டு
வந்த கலிலேயோவின் விசாரணைக் குறித்தவைகள் மக்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில்
திருப்பீடம் 332 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளது