ஜூன் 29 புனித பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா
நற்செய்தி மத்தேயு 16,
13-19
அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி,
' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' சிலர்
திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற
இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள். ' ஆனால் நீங்கள், நான் யார்
எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா,
வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ
பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள
என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;
இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி
கொள்ளா.'பேதுரு' என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் 'பாறை' என்பது பொருள். விண்ணரசின் திறவுகோல்களை
நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில்
நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.