இலங்கையின் வடக்கே முகாம்களிலுள்ள சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவு அதிகம்,
ஐ.நா. அதிகாரி கவலை
சூன்27,2009 இலங்கையின் வடக்கே மோதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலுள்ள
சிறார்கள் மத்தியில் ஊட்டச்சத்துக் குறைவு அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
இராதிகா குமாரசாமி கவலை தெரிவித்துள்ளார்.
சண்டையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கென
ஒரு தனிப்பட்ட ஊட்டச்சத்துத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று சிறார் மற்றும்
ஆயுத மோதல்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதியான குமாரசாமி கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள
ஏறத்தாழ 5000 சிறார்கள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள
ஒரு தொண்டு நிறுவனமும் கூறியுள்ளது.