இன்று நாம் தூய திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம் . தூய லூக்கா
இவரது பிறப்பை முன்னறிவிக்கிறார் . யோவானின் தாய் எலிசபெத்து கருவுற இயலாதவர் . இவரும்
செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள் . வானதூதர் யோவானின் பிறப்பைச் செக்கரியாவிடம் அறிவிக்கின்றார்
. கருவுற்றிருந்த எலிசபெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றவருமான மரியா
சந்திக்கின்றார் . நாசரேத்திலிருந்து எருசலேத்துக்கு அருகில் வாழ்ந்த அய்ன்கரிம் என்ற
ஊருக்கு மரியாள் பல கிமீ தூரம் நடந்தே சென்று எலிசபெத்தைப் பாராட்டுகிறார் . நற்செய்தித்
தூதராக தம் வயிற்றில் உருவாகும் தம் தெய்வ மகன் பற்றியும் தெரிவிக்கிறார் . திருமுழுக்கு
யோவான் இயேசுவின் வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்தியவர் . மக்களை நல்வழிப்பாதையில் வாழ
வழிகாட்டியவர் . இயேசுவுக்கும் தண்ணீரால் யோர்தான் நதியில் திருமுழுக்குக் கொடுத்தவர்
. அதுபோது இயேசுவை மக்களுக்கு வரவிருந்த மீட்பர் இயேசுதான் என தெரிவித்தார் . மிக எளிய
வாழ்க்கை வாழ்ந்தவர் . அஞ்சா நெஞ்சத்தோடு மன்னரது தவறுகளையும் சுட்டிக்காட்டியதால் சிரச்சேதம்
செய்யப்பட்டு மரணமடைந்தார் .