தூய லூக்கா நற்செய்தி - அதிகாரம்
1 , 57 – 66 , 80 .
57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.58
ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும்
உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு
விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட
இருந்தார்கள்.60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, ' வேண்டாம், அதற்கு
யோவான் எனப் பெயரிட வேண்டும் ' என்றார்.61 அவர்கள் அவரிடம், ' உம் உறவினருள்
இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே ' என்று சொல்லி,62 ' குழந்தைக்கு என்ன பெயரிடலாம்?
உம் விருப்பம் என்ன? ' என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.63
அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, ' இக்குழந்தையின் பெயர் யோவான் ' என்று
எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா
கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.65 சுற்றி வாழ்ந்தோர்
அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.66
கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, ' இக்குழந்தை
எப்படிப்பட்டதாக இருக்குமோ? ' என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய
கைவன்மையைப் பெற்றிருந்தது.
80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து
மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை
நிலத்தில் வாழ்ந்து வந்தார்.