2009-06-23 15:33:30

இலங்கையில் டெங்கு காய்ச்சலில் 146 பேர் இறந்துள்ளனர்


சூன்23,2009 இலங்கையில் பரவியுள்ள டெங்கு காய்ச்சலில் 146 பேர் இறந்துள்ளனர் மற்றும் அக்காய்ச்சல் நோய்க் கிருமிகளால் பத்தாயிரத்துக்கு மேறபட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நலவாழ்வு அமைச்சகம் அறிவித்தது.

மூட்டுக்கு மூட்டு வலியை உண்டாக்கும் இக்கடும் காய்ச்சல், கொசுக்களால் பரவுகின்றது.

மேலும், வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களின் தொகை 2 லட்சத்து, 85 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளதாகத் தற்போதைய புள்ளிவிபரத் தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகின்ற கணக்கெடுப்பின் மூலமே இந்த எண்ணிக்கை தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.