இவர்
இத்தாலியில் மாண்டுவா நகரில் பிறந்தார் . தந்தையின் விருப்பத்துக்கு எதிராக கி.பி. 1587
ல் இயேசுசபையில் சேர்ந்து துறவியானார் . பின்னர் குருமாணவராக உரோமையில் படித்தபோது மருத்துவமனையில்
பிளேக் நோயால் தாக்கப்பட்டவர்களுக்குத் தொண்டுபுரிந்தார் . இவரும் பிளேக் நோயால் தாக்கப்பட்டு
23 வயதில் , 1591 ல் காலமானார் . கி.பி.1726 ல் புனிதர் பட்டம் அளிக்கப்பட்டார் .