2009-06-19 16:34:57

சர்வதேச குருக்கள் ஆண்டையொட்டி புதிய இணையதளம்


சூன்19,2009 சர்வதேச குருக்கள் ஆண்டு தொடங்கும் இவ்வெள்ளியன்று திருப்பீட குருக்கள் பேராயம் புதிய இணையதளம் ஒன்றை ஆரம்பிக்கின்றது என்று இப்பேராயத் தலைவர் கர்தினால் க்ளவ்தியோ ஹூயும்ஸ் அறிவித்தார்.

இச்சர்வதேச ஆண்டை முன்னிட்டு /a> என்ற தலைப்பில் புதிய இணைய தளம் ஒன்றைத் திறப்பதாக நிருபரக் கூட்டத்தில் அறிவித்த கர்தினால், இக்குருக்கள் ஆண்டு குறித்த ஆன்மீகக் குறிப்புகள், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் ஏடுகள் இதில் வெளியிடப்படும் என்று கூறினார்.

இத்தகையதொரு ஆண்டை அறிவிப்பதற்கான திட்டத்தை திருத்தந்தை அறிவித்த கடந்த மூன்று மாதங்களாக திருப்பீட குருக்கள் பேராயம், இதற்கானத் தயாரிப்புக்களை மிகுந்த விறுவிறுப்புடன் நடத்தியதாகவும் இவ்வாண்டு நல்லதொரு பலனைத் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார் கர்தினால் ஹூயும்ஸ்.

மேலும் இவ்வாண்டு நிறைவடையும் நாளான 2010ம் ஆண்டு சூன் 11 வரை இந்த இணையதளம் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.