38 ' ″ கண்ணுக்குக் கண் ″ , ″ பல்லுக்குப் பல் ″ என்று கூறப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை
செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும்
திருப்பிக் காட்டுங்கள்.40 ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள்
அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு
விடுங்கள்.41 எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு
இரு கல் தொலை செல்லுங்கள்.42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன்
வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள். '