உலகப் பொருளாதார நெருக்கடி, சிறுமிகளை வேலை செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும், சர்வதேச
தொழில் நிறுவனம்
சூன்11,2009. உலகப் பொருளாதார நெருக்கடி இன்னும் அதிகச் சிறாரை, குறிப்பாக சிறுமிகளை
வேலை செய்யக் கட்டாயப்படுத்தக்கூடும் என்று சர்வதேச தொழில் நிறுவனம் வெளியிட்ட புதிய
அறிக்கை கூறுகிறது.
உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் சூன் 12 நாளை கடைபிடிக்கப்படுவதை
முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட அந்நிறுவனம், தற்சமயம் பத்து கோடிக்கு மேற்பட்ட சிறுமிகள்
வேலை செய்து வருகின்றனர் என்று அண்மை கணக்கெடுப்பு கூறியதையும் தெரிவித்தது.
சிறாரின்
கல்வி என்று வரும்போது பல நாடுகள் பையன்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால் சிறுமிகள் அதிகமாக
பாலர் தொழில் முறையில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் சர்வதேச தொழில் நிறுவன இயக்குனர்
ஹூவான் சோமாவியா கூறினார்.
உலக அளவில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும்
தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி சிறார் தொழிலை அதிகரிக்கக்கூடும் என்றும் அப்புதிய
அறிக்கை கூறுகிறது