எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருச்சபையுடன் சேர்ந்து செயல்பட
ஐரோப்பிய சமுதாய அவை அழைப்பு
ஜூன்10,2009. ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில்
அரசு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபையுடன் சேர்ந்து செயல்படுமாறு ஐரோப்பிய சமுதாய
அவை கேட்டுள்ளதாக பிதேஸ் செய்தி நிறுவனம் கூறியது.
ஜாம்பிய நாட்டிற்குச் சுற்றுப்
பயணம் மேற்கொண்ட ஐரோப்பிய சமுதாய அவை பிரதிநிதி குழுவின் தலைவராகிய சூசன் தாமஸ், பொது
மக்களுக்குத் தாய்சேய்நலக்கல்வி மற்றும் பாலியல் சார்ந்த விழிப்புணர்வு கல்வி வழங்குவதில்
திருச்சபை முக்கிய பங்காற்றுவதால், ஹைச்சய்வி நோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுப்பதற்கான
முயற்சிகளில் அரசு திருச்சபையுடன் சேர்ந்து செயல்படுமாறு வலியுறுத்தினார்.
ஆப்ரிக்காவின்
சிலநாடுகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சேவைகளில் ஐம்பது விழுக்காடு வரை கத்தோலிக்கத் திருச்சபையால்
செய்யப்படுகின்றன.