2009-06-05 17:21:26

நேபாளக் கிறிஸ்தவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை .0506.


என்டீஏ என்பது ஒரு நேபாள இந்துத் தீவிரவாத இயக்கம் . சென்ற மே 23 ல் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் உள்ள விண்ணரசிப் பேராலயத்தில் குண்டு வைத்து மூவரைக் கொல்லத் திட்டமிட்டது அந்த இயக்கமே எனத் தெரிவித்துள்ளனர் . குண்டுகளை அங்கு விட்டுச் சென்ற 27 வயதுடைய சீத்தா தாப்பாவை காவலர்கள் கைது செய்துள்ளனர் . என்டீஏ என்ற அந்தத் தீவிரவாத இயக்கம் நேபாளில் வாழும் 10 லட்சம் கிறிஸ்தவர்களையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர் . 2.4 விழுக்காடு கிறிஸ்தவர்கள் நேபாளத்தில் வாழ்கிறார்கள் . இந்துத் தீவிர வாத இயக்கம் சென்ற ஆண்டு சலேசியத் தந்தை ஜான்சன் மொயலனைக் கொலை செய்தது . இருப்பினும் கிறிஸ்தவர்கள் நேபாளத்தில் தங்கள் அறப்பணி தொடரும் எனத் தெரிவித்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.