விஞ்ஞானி கலிலேயோ விவகாரம் பற்றிய ஏடுகள் அடங்கிய தொகுப்பை அடுத்தமாத இறுதியில் திருப்பீடம்
வெளியிடும்
ஜூன்03,2009. சர்வதேச வானியல் ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு வத்திக்கான்
இரகசிய ஆவணங்கள் துறை, விஞ்ஞானி கலிலேயோ விவகாரம் பற்றிய ஏடுகள் அடங்கிய தொகுப்பை அடுத்தமாத
இறுதியில் வெளியிட இருப்பதாக திருப்பீட சார்பு தினத்தாள் லசொர்வாத்தோரே ரொமானோ கூறியது.
550
பக்கங்களையும் 1330 குறிப்புக்களையும் கொண்ட இப்புதிய தொகுப்பில் கலிலேயோ விவகாரத்தில்
ஈடுபட்டிருந்தவர்களின் தகவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று வத்திக்கான்
இரகசிய ஆவணங்கள் துறை தலைவர் ஆயர் செர்ஜோ பகானோ கூறினார்.