திருச்சபையின் மறைபோதகப் பணி நடவடிக்கைகளில் குடியேற்றதாரரை வரவேற்கும் கலாச்சாரத்தை
ஊக்குவிப்பது முக்கியமான அங்கம், பேராயர் மர்க்கெத்தோ
ஜூன்03,2009. திருச்சபையின் மறைபோதகப் பணி நடவடிக்கைகளில் குடியேற்றதாரரை வரவேற்கும்
கலாச்சாரத்தை ஊக்குவிப்பது முக்கியமான அங்கம் வகிக்கின்றது என்று குடியேற்றதாரருக்கான
திருப்பீட அவைச் செயலர் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ கூறினார்.
அமெரிக்க ஐக்கிய
நாடு, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் ஆயர் பேரவைகள் குவாத்தமாலா
நாட்டில் நடத்தும் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மர்க்கெத்தோ இதனை அறிவித்தார்.
மறைப்பணித்தளங்கள்
என்று பாரம்பரியமாகச் சொல்லப்படும் ஆப்ரிக்கா அல்லது ஆசியாவில் மறைப்பணி செய்வது மட்டுமல்ல,
இக்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் மக்கள் செல்வதால் திருச்சபையும் அம்மக்களுடன் சென்று
மறைப்பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
நற்செய்தி அறிவிப்பு கலாச்சாரத்தின்
ஒரு பகுதியாக குடியேற்றதாரர் மீது மேய்ப்புப்பணி சார்ந்த அக்கரை எடுப்பது அமைந்துள்ளது
என்று உரைத்தார் பேராயர்.