2009-06-03 13:12:26

சிக்கிமில் சமூகப் பிரச்சனைகள் களையப்படுவதற்குத் திருச்சபை உதவுமாறு அரசு அதிகாரிகள் அழைப்பு


ஜூன்03,2009 இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் தற்கொலைகள் மற்றும் பிற சமூகப் பிரச்சனைகள் களையப்படுவதற்குத் திருச்சபை உதவுமாறு அரசு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

தற்கொலைகளை நிறுத்துவதற்கு மதிப்பீட்டுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்கும் கல்வியை ஊக்குவிக்குமாறு சிக்கிம் மாநில தேர்தல் ஆணையச் செயலர் Chandra Prakash Dawan திருச்சபையை வலியுறுத்தினார்.

திருச்சபை மற்றும் அம்மாநில அரசு அதிகாரிகளுக்கும் இடையே அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு அரசு அதிகாரிகள் கூறினர்

இந்தியாவில் கேரளா, பாண்டிச்சேரிக்கு அடுத்தபடியாக சிக்கிமில் தற்கொலைகள் அதிகமாக இடம் பெறுகின்றன என்று அக்கூட்டத்தில் கூறப்பட்டது.

7096 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட மலைப்பகுதி மாநிலமான சிக்கிம், கோவாவுக்கு அடுத்தபடியாகவுள்ள சிறிய மாநிலமாகும்.








All the contents on this site are copyrighted ©.