2009-06-02 15:12:33

நைஜீரியாவின் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், ஆயர்கள் அழைப்பு


ஜூன்02,2009. நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் ஆயுதம் தாங்கிய இரு குழுக்களிடையேயும் அரசு துருப்புகளுடனும் மோதல்கள் இடம்பெற்றுவருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அந்நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

ஆயுதக் குழுக்களும் அரசு துருப்புகளும் மோதும் போது பெருமளவில் துன்பங்களை அனுபவிப்பது அப்பாவி பொதுமக்களே எனக்கூறும் ஆயர்கள், இதனால் பொதுமக்கள் குடிபெயர்ந்து செல்லல், நோய்களும் பசிச்சாவுகளும் அதிகரித்தல் போன்றவைகளும் இடம் பெறுவதாகவும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

தென்மேற்குப் பகுதியின் வாரியில் மட்டும் இதுவரை இருபதாயிரம் பேர் மோதல்களுக்குள் சிக்கியுள்ளதாகவும் 65 பேர்வரை இறந்துள்ளதாகவும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நாட்டிற்குள் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் ஐக்கியத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கவும் ஒவ்வொருவருக்கும் கடமையுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ள நைஜீரிய ஆயர்களின் கடிதத்தில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பெலிக்ஸ் ஜோப் கையெழுத்திட்டுள்ளார்.

 








All the contents on this site are copyrighted ©.