2009-06-01 14:18:08

அப்ருஸ்ஸோ இளையோர் மீது உயிர்த்த கிறிஸ்து தமது ஆறுதலின் ஆவியைப் பொழியுமாறு திருத்தந்தை செபம்


ஜூன்01,2009. அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் அண்மையில் இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படட் அப்ருஸ்ஸோ மாகாண பகுதி இளையோரை சிறப்பாக நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.

உலக இளையோர் தினத் திருச்சிலுவையைச் சுற்றி அமர்ந்திருக்கும் அப்ருஸ்ஸோ இளையோர் மீது இறந்து உயிர்த்த கிறிஸ்து தமது ஆறுதலின் ஆவியைப் பொழியுமாறு தான் செபிப்பதாகவும் கூறினார் அவர்.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எட்டு மாணவ மாணவியர் இறந்த லாக்குய்லா மாணவர் விடுதிக்கு, உரோம் சான் லொரென்சோ இளையோர் மையத்தின் 12 தன்னார்வப் பணியாளர்கள் உலக இளையோர் தினத் திருச்சிலுவையை இச்சனிக்கிழமை எடுத்துச் சென்றனர்.

2011ம் ஆண்டு ஆகஸ்டில் ஸ்பெயினின் மத்ரித் நகரில் உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படும் முன்னர் இத்திருச்சிலுவையானது பல நகரங்களுக்கு எடுத்துச் செல்லபப்டும்.








All the contents on this site are copyrighted ©.