செப்டம்பர் 26-28, 2009 செக் குடியரசுக்குத் திருத்தந்தை திருப்பயணம்
மே30,2009. திருத்தந்தை.16ம் பெனடிக்ட் செக் குடியரசுக்கு வருகிற செப்டம்பர் 26 முதல்
28 வரைத் திருப்பயணம் மேற்கொள்வார் எனத் திருப்பீடம் இச்சனிக்கிழமை அறிவித்தது.
செக்
குடியரசுத் தலைவர் வாக்லாவ் க்ளாவ்ஸ் மற்றும் செக் ஆயர்கள் பேரவையின் அழைப்பை ஏற்று வருகிற
செப்டம்பரில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ள திருத்தந்தை, அந்நாட்டின் ப்ராக், Brno, Stara
Boleslav ஆகிய இடங்களுக்குச் செல்வார் என்றும் திருப்பீடம் கூறியது.
செக் குடியரசுத்
தலைவர் க்ளாவ்ஸ் தலைமையிலான குழு இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்த
பின்னர் இதனை வெளியிட்டது திருப்பீடம்.