அருட்திரு.வின்சென்ட் சின்னத்துரைக்கு ராஷ்ட்ரிய கௌரவ விருது
மே30,2009. அருட்திரு.வின்சென்ட் சின்னத்துரை, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளைப்
பாதுகாப்பதற்குக் குறிப்பிட்டதக்க வகையில் ஆற்றிய பணியைப் பாராட்டும் விதத்தில் அவருக்கு
ராஷ்ட்ரிய கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சர்வதேச நட்புக் கழகத்தால் இம்மாதம்
20ம் தேதி புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் ஆளுனராகிய
டாக்டர் பீஷ்மா நரியன் சிங் இவ்விருதை அக்குருவுக்கு வழங்கினார்.
மேலும் அதேநாளில்,
குளோரி ஆப் இன்டியா என்ற தங்கப் பதக்கமும் ஒரு சான்றிதழும் அருட்திரு.வின்சென்ட் சின்னத்துரைக்கு
வழங்கப்பட்டது. இதனை இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.கே.கிருஷ்ணமூர்த்தி
வழங்கினார்.
சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு மையத்தின் இயக்குனராகிய அருட்திரு.வின்சென்ட்
சின்னத்துரை, தமிழக அரசின் சிறுபான்மை அவைத் தலைவர் மற்றும் தமிழக சிக்னிஸ் அமைப்பின்
தலைவருமாவார்