இது நாள் வரை அதனுடைய 80 ஆண்டுக்கால் வரலாற்றில் இல்லாத புதிய திட்டத்தை வத்திக்கான்
வானொலி தொடங்கியுள்ளது . சென்ற செவ்வாய்க்கிழமையன்று இதனை வத்திக்கான் வானொலியின் தலைமைப்
பொறுப்பிலிருக்கும் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி இதனை செய்தித் தொடர்பாளர்களுக்குத் தெரிவித்தார்
. வானொலிகளில் விளம்பரங்கள் வருவது புதியது அல்ல . வத்திக்கான் வானொலி தொடர்ந்து திருத்தந்தையின்
கருத்துக்களையும் செய்திகளையும் , திருச்சபையின் செய்திகளையும் வெளியிடும் எனத் தெரிவித்தார்
. வத்திக்கான் வானொலியில் விளம்பரம் செய்யும் முதல் நிறுவனம் 22 நாடுகளுக்கு 4 கோடியே
90 லட்சம் மக்களுக்கு மின்சக்தியையும் எரிவாயுவையும் விநியோகிக்கும் எனல் என்ற அமைப்பாகும்
.