ரஷ்யாவில் திருச்சபை சாகவில்லை என்கிறது ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை. மாஸ்கோவில் உள்ள ஆர்த்தோடாக்ஸ்
செயலகம் வத்திக்கானுக்கும் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபைக்குமிடையே உறவுகள் வளர்ந்து வருவதாகத்
தெரிவித்தார் . உலகில் நற்செய்தி அறிவிப்பதற்கு அந்த நல்லுறவு மிகவும் முக்கியம் எனத்
தெரிவித்துள்ளார் .
ஸ்பெயின் நாட்டில் உள்ள நவாராப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய
தந்தை ஈகோர் விசானோவ் இரண்டு திருச்சபைகளுக்கும் முன்பை விட தற்போது ஒருவர் மற்றவரை நன்கு
புரிந்து கொள்வதாகத் தெரிவித்தார் . கத்தோலிக்கத் திருச்சபையும் ஆர்த்தோடாக்சும் இணைந்து
ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தின் தொடக்கம் பற்றி ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .
கம்யூனிச ஆட்சி காலத்தில் ரஷ்யாவில் திருச்சபை மறைந்திருந்தது , மரிக்கவில்லை எனத் தெரிவித்தார்
. மக்களின் விசுவாசத்தை தற்போது ஆழப்படுத்துவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்
.