2009-05-28 17:43:32

வட கொரியாவின் அணுஆயுத சோதனையைக் கண்டிக்கிறது வத்திக்கான்.280509


வட கொரியா புரிந்துள்ள அணுகுண்டுச் சோதனையை வத்திக்கான் கண்டிக்கிறது . இவ்வாறு அகில உலகத்தடைகளை மீறிப் புரியம் அணுச்சோதனையும் , ஏவுகணைகளும் உலக அளவிலும் உள்நாட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வத்திக்கான் அச்சம் வெளியிட்டுள்ளது . இதனைக் கண்டித்து வத்திக்கான் செய்தி ஏடு லொஸ்வர்த்தாரே ரொமானோ அதனுடைய முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது . தன்னை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு எனத் தலைப்பிட்ட செய்தி வெளியாகியுள்ளது . மே 25 ல் வட கொரியா அணுச் சோதனை செய்ததாகத் தெரிவித்ததும் உலக நாடுகள் பலவும் பலமான எதிர்ப்புத் தெரிவித்திருந்தன .

 








All the contents on this site are copyrighted ©.