உரோமை மறைமாவட்டக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை. 280509.
மே 26 , இந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலையில் இங்குள்ள ஜான் லாத்தரன் பசிலிக்காவில்
உரோமை மறைமாவட்டக் கத்தோலிக்கப் பிரதிநிதிகளின் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை
16 ஆம் பெனடிக்ட் . அதுபோது தாங்கள் வாழும் பங்குத்தளங்களில் குருக்களுக்கு உதவி புரிவதோடு
, திருச்சபையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார் . பங்குத்தளங்களில்
கத்தோலிக்கர்களின் முழுப்பகிர்வையும் ஊக்கப்படுத்த உரோமையில் மூன்று நாள் இம்மாதம் 29
தேதிவரை கருத்தரங்கு நடந்து வருகிறது .பங்குத்தளங்களில் திருச்சபை உறுப்பினர்களின் கடமை
என்பது கருத்தரங்கின் மையக் கருத்தாகும் .
திருச்சபை பற்றிய நல்லறிவை
வளர்த்துக்கொள்ளவேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார். நாம் அனைவரும் கிறிஸ்துவால்
ஒரு குடும்பமாக வேற்றுமைகள் ஏதுமின்றி இணைக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்தார் . திருச்சபை
என்பது அதன் தலைவர்கள் மட்டுமல்ல என்பதை இறைமக்கள் உணரவேண்டும் எனத் தெரிவித்தார் திருத்தந்தை
.
நம்முடைய விசுவாசத்தை இறைவனோடு கொண்டுள்ள நெருங்கிய உறவால் ஆழப்படுத்தவேண்டும்
எனத் தெரிவித்தார் . நற்செய்தியை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார்
. பிறரன்பில் வளரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை தேவையில் உள்ளோருக்கு உதவுமாறு
கூறினார் .
உரோமைப் பங்குத்தளங்களில் வாழும் இறைமக்களுடைய ஈகைத் தன்மையால் உலகில்
துன்புறும் மக்கள் திருச்சபை அவர்களுக்கு அருகில் உள்ளதாக உணர்ந்து இரக்கமுள்ள தேவன்
அவர்கள் அருகிலிருப்பதையும் உணர அருள் மழை வேண்டினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .